districts

கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்க மாவட்ட பேரவை

மதுரை, ஜன.29- தமிழ்நாடு கால்நடை பரா மரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மதுரை மாவட்ட பேரவை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி யில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க கட்டிடத்தில் மாநில இணைச் செயலாளர் ராஜசேக ரன் தலைமையில் நடைபெற்றது.  மாநில துணைத் தலைவர் பெரிய சாமி, ஜெயபால் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் காமராஜ் துவக்கி வைத்துப் பேசி னார். மாநிலப் பொதுச் செயலா ளர் ஜெயபால் சிறப்புரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் ராஜ் குமார் நன்றி கூறினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ், மதுரை மாவட்ட இணைச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். பேரவையில் மாவட்டத் தலை வராக முருகேஸ்வரி, மாவட்டச் செயலாளராக ராஜ்குமார், மாவட்ட பொருளாளராக வசந்த உள்ளிட்ட 10 பேர் கொண்ட நிர்வா கக்குழு தேர்வு செய்யப்பட்டது.  ஏழாவது ஊதியக்குழு முரண்பாட்டினை நீதிமன்றத்தின் வாயிலாக சந்திப்பது. அரசாணை எண் 12 - நாள் 24 .1. 1995-ன் படி “டி”- பிரிவிலிருந்து “சி” பிரிவிற்கு மாற்றிய பின்பு “டி” பிரிவுக்கான சீருடையை வழங்குவதால் “சி” பிரிவில் பணியாற்றும் எங்க ளுக்கு வழங்கப்படும் சீருடை நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். “சி”-பிரிவில் ஊழி யர்கள் பணியாற்றும் எங்க ளுக்கு தாது உப்பு கலவை மூடை களை மற்றும் விதை மூடை களை தூக்கும்(கலாசி பணி களை) வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.