districts

img

விருதுநகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

விருதுநகர், டிச.5- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனு வாக வழங்கினர். இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் ஆனையூர், மங்களம், கீழத்திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த வன்  கொடுமையால் பாதிக்கப்பட்ட 21  நபர்  களுக்கு தலா 2 சென்ட் வீதம்  ரூ.4லட்சத்து  20ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்  துறையின் சார்பில் இருவருக்கு முதலமைச்  சர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ்  ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கைக்கால்களை வழங்கினார். மேலும், விருதுநகர் அருகே உள்ள பட்டம்  புதூர் கிராமத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவருக்கு ஆதரவற்ற வித வைக்கான உதவித்தொகை, முத்துலட்சுமி என்பவருக்கு முதியோர் உதவித் தொகைக்  கான ஆணை ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட வரு வாய் அலுவலர்  ரவிகுமார், நேர்முக உதவி யாளர்(நிலம்)  முத்துக்கழுவன், மாவட்ட சமூக நல அலுவலர்  இந்திரா, மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர்  சந்திரசேகர், தனி வட்டாட்சியர்(ச.பா.தி) பொன்ராஜ் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.