districts

அனைவரும் தமிழில் கையொப்பமிடுக!

விருதுநகர், ஜூன்.29- தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைவரும் தமிழில் முன்னெழுத்துடன் கையொப்பமிடுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது : தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசாணைப்படி பொது மக்கள், அனைத்து  அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி  மாணவ, மாணவியர் தமிழில் பெயர் எழு தும் போது முன் எழுத்தையும் தமிழில் எழு திட வேண்டும். மாணவர்கள் தங்களது தொடக்கக் கல்வி முதல் கல்லூரி காலம் வரை தமிழ்  மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்  டும். அரசுத் துறைகளிலும் ஆணைகள் மற்  றும் ஆவணங்களில் பொது மக்களின் பெயர்களை குறிப்பிடும் போது முன்னெ ழுத்து உட்பட அனைத்தும் தமிழில் பதிவு  செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.