தேனி, அக்.30- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பிச்சம்பட்டி ஊராட்சி மற்றும் க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டப்பராஜபுரம் ஊராட்சி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ. முரளீதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை, தேனி, சின்னமனூர், போடிநாயக்கனூர் மற்றும் உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றயத்திற்குட்பட்ட ஊராட்சிப்பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 19 பணிகள் ரூ.1.07 கோடி அரசு நிதி மற்றும் ரூ.0.56 கோடி பொதுமக்களின் பங்களிப்பு நிதி என மொத்தம் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், பிச்சம் பட்டி ஊராட்சிக்குட்பட்ட முல்லையம்பட்டி கிராமத்தில் சமுதாயக் கூடத்தின் மேல்பகுதியில் உணவு அருந்தும் கூடம் ரூ.8.66 இலட்சம் அரசு நிதி மற்றும் ரூ.4.34 லட்சம் பொதுமக்களின் பங்களிப்பு நிதி என மொத்தம் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டிலும், க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டப்பராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் கிராமத்தில் சமுதாயக்கூடம் ரூ.14 இலட்சம் அரசு நிதி மற்றும் ரூ.7 இலட்சம் பொது மக்களின் பங்களிப்பு நிதி என மொத்தம் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கொள்ளப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டப்பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், இதுபோன்று பொதுமக்களின் பங்க ளிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் மலர்விழி, திருப்பதி, அய்யப்பன், எட்டப்ப ராஜபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜாத்தி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.