districts

img

விருதுநகர் ஊராட்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருதுநகர், ஆக.11- விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பகுதிக ளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். விருதுநகர் ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.32.80 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆண், பெண்க ளுக்கான கழிப்பறை கட்டிடத்தையும்,  முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டம் மூலம் ரூ.48.75 இலட்சம் மதிப்பில்  பனைநகர் வரை சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், சத்திரரெட்டிய பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்  ரூ.4.65 இலட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ள தையும், ரூ.5.86 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையலறைக் கூடத்தினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு)  தண்டபாணி, உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உட்பட பலர் இருந்தனர். இலவச கண் சிகிச்சை முகாம்