districts

img

காரியாபட்டியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விருதுநகர், மே 6-    விருதுநகர் மாவட்டம்,  காரியாபட்டி  ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை  மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் நேரில்  ஆய்வு செய்  தார். காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம்.  ரூ.9.95 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள், ரூ.6.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக்  சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள், சட்ட மன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தித் திட்டத்தின் கீழ் ரூ.75  ஆயிரம் மதிப்பில் அமைக்  கப்பட்டுள்ள மழை நீர் சேக ரிப்பு பணி,  கணக்கனேந்தல் கிராமத்தில் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடப் பணி, காரியாபட்டியில் ரூ. 76 ஆயிரம் மதிப்பில் சத்து ணவுக்கூடம் புனரமைப்பு பணி, எஸ்.கல்லுப்பட்டியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் கலை யரங்கம்  பணி,   ரூ.1.84 லட்சம் மதிப்பில் கிராம நூலகம்   புதுப்பிக்கும் பணி,  ரூ.1.30 லட்சம் மதிப்பில் உறிஞ்சு குழி  அமைக்கப்பட்டுள்ள பணி, மந்திரி ஓடை கிராமத்தில் ரூ.84 ஆயிரத்தில் புனர மைக்கப்பட்ட ஊராட்சி ஒன்  றிய துவக்கப்பள்ளி பணி,   ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியில் ரூ.3.90 லட்சம்  மதிப்பில் மாணவிகளுக் கான கழிப்பறைகள்  கட்டும் பணி, மேலக்கள்ளங்குளம் ஊராட்சியில் ரூ.8.11 லட்சம் மதிப்பில்  கதிரடிக்கும் களம்  அமைக்கப்படும் பணி ஆகிய வற்றை மாவட்ட ஆட்சியர்  நேரில் சென்று ஆய்வு செய்  தார். இந்த ஆய்வின் போது,  திட்ட இயக்குநர் (மா.ஊ. வ.மு) மரு.தண்டபாணி, உதவி செயற்பொறியாளர் (அருப்புக்கோட்டை) சங்கர், உதவி திட்ட அலு வலர் (மகளிர் திட்டம்) பீம ராஜா, வட்டாட்சியர் விஜய லட்சுமி, உட்பட பலர் உட னிருந்தனர்.