districts

img

மாநில குத்துச்சண்டை - மாற்றுத்திறனாளி பேட்மின்டன் போட்டிகள் திண்டுக்கல்லில் துவங்கின

திண்டுக்கல், ஜூலை 30- திண்டுக்கல்லில் 2 நாள் நடைபெறும்  மாற்று திறனாளிகளுக்கான மாநில அள விலான  பாரா பேட்மின்டன்  சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 30 அன்று  பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் உள்ள உள்ள ரங்கத்தில் துவங்கின.  திண்டுக்கல், மதுரை,சென்னை,காஞ்சிபுரம்,திருநெல்வேலி, கன்னியாகுமாரி  உட்பட 28 மாவட்டங்களில் இருந்து  100- க்கும் மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள் பங்  கேற்றனர். 6 பிரிவுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடை பெறுகிறது.  இப் போட்டிகளை தமிழ்நாடு பாரா  பேட்மின்டன் சங்க காப்பாளரும் இக்கல்லூ ரியின் நிறுவனருமான  ஆர்.எஸ்.கே. ரகு ராம் மற்றும் கல்லூரி நிர்வாக குழு உறுப்பி னர் சூர்யா ரகுராம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கேடயம், சான்றிதழ் ரொக்கப் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இங்கு நடைபெறும் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீராங்கனைகள் தேசிய அளவில் ஒடிசா மாநிலத்தில் நடைபெறும்  போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

குத்துச்சண்டை போட்டி 

.திண்டுக்கல் மாவட்ட குத்துச்சண்டை  கழகம் மற்றும் பண்ணை கல்வி குழுமம்  சார்பாக மாநில அளவிலான குத்துச்  சண்டை போட்டிகள் சனி .ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் திண்  டுக்கல்லில் நடைபெறுகின்றன.  திண்டுக் கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவ கங்கை, நெல்லை ,கன்னியாகுமரி, சென்னை,  விருத்தாச்சலம், திருச்சி, கோவை ,நாமக்  கல், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்க ளில் இருந்து 500க்கும் மேற்பட்ட இளம்  குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்  டார்கள்.  குத்துச்சண்டை கழகம் சார்பாக  மாதவன் ஹக்கீம், ஆறுமுகம் ,காசிராஜன், பெஞ்சமின் பிராங்கிளின், சுதர்சன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.  ஜிடிஎன் கல்லூரி இயக்குநர்- ஒருங்கிணைப்பாளர் ஆர். துரை  பங்கேற்றார். வெற்றிபெறும் வீரர்களுக்கு ஞாயிறன்று  கேடயங்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன .தமிழ்நாடு பாக்சிங்  அசோசியேசன் சார்பாக லட்சுமி காந்தன் கலந்து கொள்ள உள்ளார் . திண்டுக்கல் மாவட்டத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை யாகும். இந்த போட்டிகளை பார்க்க பல் வேறு கிராம மக்கள் குவிந்தனர்.