திண்டுக்கல், மார்ச் 12- ஆசிரியர்களுக்கும். பொதுமக்களுக்கும் இணைப்புப் பாலமாக இல்லம் தேடிக்கல்வி இயக்கு நர்கள் விளங்குவதாக இயக்குநர் இளம்பகவத் கூறி னார். வடமதுரை பகுதியில் இல்லம் தேடிக் கல்வியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அய்யலூர் ஆர்.வி.எஸ். கலைக்கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆட்சியர் எஸ். விசாகன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை இயக்கு நர் க.இளம்பகவத் சிறப்புக் விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:- இல்லம் தேடிக்கல்வியில் பணியாற்றும் தன்னார்வலர்களின் பணி சிறப்பாக உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் சிறப்பான பயிற்சி அளித்து வருகிறார்கள். தன்னார்வலர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறுத் திட்டங்களை அமலாக்க உள்ளோம். வாசிப்பு இயக்கம் நடத்தவும் திட்ட மிட்டுள்ளோம். இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களில் 98 சத வீதம் பேர் பெண்கள். இவர்கள் மாணவ-மாணவி களிடம் நெருங்கிப் பழகுவதன் மூலம் ஆசிரி யர்கள்- பெற்றோர்கள்- பொதுமக்களுக்கு இணைப்புப்பாலமாக விளங்குகிறார்கள். தமிழ்நாடு முதல்வர் இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் திட்டத்தை இன்னும் சிறப்பாக்க தொடர்ந்து பணி யாற்ற வேண்டுமென தன்னார்வலர்களைக் கேட்டுக்கொண்டார்.
திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் பேசுகையில், பள்ளி மாணவர்களின் கல்வி ஆர்வத்தைத் தூண்டி ஊக்குவித்தது தான் இந்தத் திட்டத்தின் வெற்றி. மாணவ சமுதாயத்தின் வெற்றிக்கு கல்வி அவசியம். மாணவ-மாணவிகளின் பன்முகத்தன்மையை தன்னார்வலர்கள் வெளிக்கொண்டு வருகிறார்கள். இதனால் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் மாணவ, மாணவிகள் முழுமையாக பள்ளிக்குச் செல்கிறார்கள். கல்வித்தரம் உயர தொடர்ந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு கல்வி பயில வேண்டும் என்றார். நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் நாச ரூதீன், ஆர்.வி.எஸ். கல்லூரி முதல்வர் திருமாறன், ஒட்டன்சத்திரம் டயட் முதல்வரும் மாவட்டக் கல்வி அலு வலருமான இளங்கோவன், வட்டாரக் கல்வி அலுவலர் பி.நல்லுச்சாமி. தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ச.மோசஸ். வட்டாரக் கல்வி அலுவலர் முருகேஸ்வரி. வளமைய ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், குருபிரசாத், வடமதுரை பொறுப்பாசிரியர் அழகு.குமரேசன், தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள், ஒன்றிய இல்லம் தேடி கல்வி கருத்தாளர்கள், உட்பட ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டனர்.