districts

img

காப்பீட்டு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் திண்டுக்கல் ஆர். நாராயணன் நூற்றாண்டு நிறைவு

மதுரை, மார்ச் 6-  அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் அகில இந்திய முன்னாள்  துணைத் தலைவர் தோழர் திண்டுக்கல் ஆர். நாராயணன் நூற்றா ண்டு பிறந்தநாள்  நிகழ்ச்சி மதுரையில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க மதுரை கோட்ட தலைவர் நா. சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. 

ஐசிஇயூ தஞ்சை கோட்ட செயலா ளர் எஸ். செல்வராஜ் வரவேற்று பேசி னார். ஏஐஐபிஏ மதுரை கோட்ட நிர்வாகி ஜி. மீனாட்சிசுந்தரம் தோழர் ஆர். நாரா யணன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காப்பீட்டு ஊழியர் சங்க மூத்த தலைவர்  என்.சீனிவாசன், “இன்றைக்கு தோழர் நாராயணன் நம்மிடம் இல்லாத சூழ்நிலையை உணர்ந்துள்ளோம்  மத்தியில் ஒரு மதவாத சாதிய அரசை உருவாக்க இன்றைக்கு மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இது போன்ற  சூழ்நிலைகளில் வரும் தேர்தலில் ஒரு மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும், ஒன்றிய அரசின் தொழிலா ளர் விரோத கொள்கைக்கு எதி ராக மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி யவர் நாராயணன். தொழிற்சங்கங் களை ஒன்றிணைப்பதில் மிகப்பெரும் பங்கினை செலுத்தியவர். ‘மத்தியில் தொழிலாளர் விரோத - தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை கடை பிடிக்கும் மோடி அரசை அகற்றுவதே தோழர் நாராயணன் அவர்களின்  நூற்றாண்டு நிறைவுக்கு செய்யும் பணி யாக இருக்கும்” என்று பேசினார்.

அகில இந்திய வங்கி ஊழியர் கூட்ட மைப்பு மூத்த தோழர் ஆர். எஸ். மணி, அகில இந்திய இன்சூரன்ஸ் பென்சனர் சங்க தஞ்சை கோட்ட மூத்த தலைவர் புண்ணியமூர்த்தி, தோழர் நாராயணன் புதல்வி மீனாட்சி, தென்மண்டல காப்பீட்டுக்கழக  ஊழியர் சங்க முன் னாள் பொதுச் செயலாளர் க.சுவாமி நாதன், தென்மண்டல பொதுச் செயலாளர் டி. செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர். 

மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் தோழர் ஆர். நாரா யணன் துணைவியார் மற்றும் எல்ஐசி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்ட னர். இறுதியாக நெல்லை கோட்ட நிர்வாகி என். பொன்னையா நன்றி கூறினார்.