திண்டுக்கல். அக்.28- தமிழ்நாட்டில் பால் உற்பத்தியா ளர்களிடமிருந்து கொள் முதல் செய்யும் பாலுக்கு பசும்பாலுக்கு லிட்ட ருக்கு ரூ.41ம், எருமைப்பாலுக்கு லிட்ட ருக்கு ரூ.52ம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் ஆட்சியர் வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் என். பெருமாள் மேலும் பேசியதாவது: டி.ஏ.பி., பொட்டாஷ், யூரியா போன்ற உரங்கள் கடைகளில் கிடைக்க வில்லை. ஒரு செயற்கையான தட்டுப்பாடு நிலவுகிறது. 10 ஆயிரம் டன் வந்துள்ளது. பதுக்கல் காரணமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. உரம் கிடைக்கவில்லை என்றால் கூட்டுறவு சொசைட்டிகளில் சென்று கடன் வாங்கியவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரி விக்கிகறார்கள். சாதாரண கடைக ளில் உரம் கிடைத்தால் தான் விவசா யிகளுக்கு எளிதாக இருக்கும். இந்த பதுக்கலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சோதனை மேற்கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 18 சதவீதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மழை காலம் என்பதால் நெல்லின் ஈரப்ப தம் மாறுவதற்கு காலம் பிடிக்கும். எனவே 22 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அதே போல் நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டி, மற்றும் பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளிலும் நெல் கொள்முதல் துவங்க வேண்டும்.
அதே போல ராபி பருவத்தில் வாழை, வெங்காயம், மிளகாய், வெண்டை, கத்திரி ஆகிய பயிர்க ளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படு கிறது. இந்த பயிர் காப்பீடு தொடர் பாக திண்டுக்கல், நத்தம், சாணார் பட்டி, வத்தலகுண்டு ஆகிய பகுதிகள் பிர்க்கா பட்டியலில் இணைக்கப்பட வில்லை. ஆனால் இந்த வட்டாரங்க ளில் மேற்படி பயிர்கள் விளைகின்றன. அந்த விவசாயிகள் பயிர்காப்பீடுக்கு மனு செய்தால் அரசு தரப்பில் நிரா கரிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த பயிர்களுக்கான பயிர் காப்பீடு; பிர்க்கா பட்டியலில் இந்த வட்டாரங்களை இணைக்க வேண்டும். திண்டுக்கல் ஒன்றியம் ஆலக் குவார்பட்டி கிராமத்தில் வேலம் பட்டி சாலையில் ஏற்கனவே ஆக்கிர மிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றி உள்ளனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் இந்த சாலையை ஆக்கிரமித்துவிடக்கூடாது. எனவே அந்த சாலையை தார்ச்சாலை யாக மாற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அது அப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவும். அதே போல் ஆத்தூர் வட்டாரத்தில் பாளையங் கோட்டை கிராமத்தில் பொதும்ககள் பயன்படுத்தி வந்த சாலையில் கிராவல் மண் எடுக்கப்பட்டு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சாலையில் கிராவல் மண் எடுக்க ஆட்சியர் தடை விதிக்க வேண்டும் என்று பெருமாள் பேசினார். பால் உற் பத்தியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் காசிமாயன், வெள்ளைக் கண்ணன் ஆகியோர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். வேலம்பட்டி சாலை தொடர்பாக சிபிஎம் ஒன்றியக்கவுன் சிலர் செல்வநாயகம் ஆட்சியரிடம் மனு கொடுத்தார். (நநி)