districts

img

மலைவாழ் மக்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட மாநாடு

சின்னாளபட்டி, ஜூலை 6- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக் கல் மாவட்ட 9 ஆவது மாநாடு  நிலக்கோட்டையில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். சங்கக்  கொடியை மாநில செயற்  குழு உறுப்பினர் காளி யப்பன் ஏற்றிவைத்தார். அஞ்  சலி தீர்மானத்தை ஈஸ்வரன்  வாசித்தார். பேரூராட்சி தலைவரும் சங்கத்தின் மாநில துணைத் தலைவ ருமான சேகர் துவக்கவுரை யாற்றினார். வேலை அறிக்  கையை மாவட்ட செயலாளர்  செல்லையா சமர்ப்பித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஆர்.சச்சிதானந்தம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் சட்டமன்ற உறுப் பினரும் சங்கத்தின் மாநிலத் தலைவருமான டில்லிபாபு சிறப்புரையாற்றினார். கொடைக்கானல், தாண்டிக் குடி, பெருமாள்மலை, சிறு மலை, பழனி, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலைவாழ் மக் கள் கலந்து கொண்டனர். சௌந்தர்ராஜன் நன்றி கூறி னார். மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டத் தலைவராக செல்லையா, செயலாளராக அஜாய்கோஷ், பொருளாள ராக பொன்னுசாமி உட்பட 7  பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. நிலக்கோட்டை என்.புதுப்  பட்டியில் உண்டு உறை விடப் பள்ளி அமைக்க வேண்டும். காட்டுநாயக்கன் சாதியினர் அனைவருக்கும் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.