districts

img

சிலம்ப ஆசான்- வீரர்களுக்கு விருது வழங்கும் விழா

சின்னாளப்பட்டி, ஜூலை 25- திண்டுக்கல் மாவட்டம் - செம்பட்டி - தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் மற்றும் வளங்குன்றாச் சுற்றுச்சூழல் & கல்விக்கான அறக்கட்டளை சார்பாக சிலம்பக்  கலையில் சாதனை புரிந்த சிலம்ப ஆசான் மற்றும் வீரர்களுக்கு சிலம்பக்கலாமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை முதுமணி மற்றும் மகாகுரு விருதுகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்விற்கு காந்திகிராம கிராமியப்  பல்க லைக்கழக ஆங்கில துறை பேராசிரியர்.ஸ்ரீ.பாலசுந்தரி  தலைமை தாங்கினார். கவிஞர்.ம.கண்ணன் வரவேற்றார். அச்சாணி அமைப்பு ஆசிரியர்.சோ.ராமு, ஆசிரியர்.கருப்பையா, அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சிலம்ப ஆசான் ம.செந்தில்குமார் மற்றும் வனம் நேச்சு ரல்ஸ் சே.பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  சிலம்பக் கலையில் சாதனை படைத்த  8 ஆசான்  களுக்கும், 30 மாணவர்களுக்கும்  சு.பிரபாகரன், வ. அழகர்சாமி ஆகியோர் விருதுகளை வழங்கி பாராட்டி னர். சிலம்ப சாதனையை நோக்கி பயணித்துவரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 40  சிலம்ப மாண வர்களுக்கு  பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்  பட்டது.