திண்டுக்கல், பிப்.22 நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத் தில் 7 பேரூராட்சிகளில் சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கன்னிவாடி பேரூ ராட்சியில் 1வது வார்டில் போட்டியிட்ட எஸ்.மணிமாலதி 239 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக 178, பாஜக 24 வாக்குகள் பெற்றனர். பதிவான வாக்குகள் 490 ஆகும். அய்யம்பாளையம் பேரூராட்சியில் 12வது வார்டில் போட்டியிட்ட பி.பழனியம்மாள் 342 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக 145, பாஜக 29 வாக்குகள் பெற்றனர். பதிவான வாக்குகள் 525 ஆகும் .பாளை யம் பேரூராட்சியில் 2வது வார்டில் போட்டியிட்ட பி.சேகர் 431 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக104, சுயேட்சை 247, பாஜக 4 வாக்குகள் பெற்றனர். பதிவான வாக்குகள் 964 ஆகும். வடமதுரை பேரூராட்சியில் 12வது வார்டில் போட்டியிட்ட எம்.மலைச்சாமி 458 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக 189, சுயேட்சை 124, பாஜக 20 வாக்குகள் பெற்றனர். பதிவான வாக்குகள் 871 ஆகும். அய்யலூர் பேரூராட்சியில் 1வது வார்டில் போட்டியிட்ட வி.முருகேஷ்வரி 588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சை 421, பாஜக 40, வாக்கு கள் பெற்றனர். பதிவான வாக்குகள் 1102 ஆகும். நத்தம் பேரூராட்சியில் 16வது வார்டில் போட்டியிட்ட கே.விஜயவீரன் 672 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக 270, நாம் தமிழர் 2 வாக்குகள் பெற்றனர்.பதி வான வாக்குகள் 944 ஆகும்.