சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர், மாணவியர்களுக்கு தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சரவணன் துப்பாக்கி, வாக்கி டாக்கி, கைதியை விசாரிக்கும் அறை, கணினி அறை, காவலர்கள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறை, பதிவேடு அறை, புகார் எழுதும் முறை, ஓய்வறை, ஆகியவற்றை காண்பித்து விளக்கம் அளித்தார் . மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். முன்னதாக காவல் நிலையத்தின் சார்பாக மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியை செல்வமீனாள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.