தமிழக-கேரள ஆளுநர்களை கண்டித்து மாநில எல்லையான களியக்காவிளையில் செவ்வாயன்று (நவ.15) மாலை சிபிஎம் குமரி மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அனந்தசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், எம்.அண்ணாதுரை, வி.விஜயமோகனன், எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், எம்.ஏ.உசேன், என்.எஸ்.கண்ணன், கே.தங்கமோகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.