மதுரை, ஜூலை 11- மருந்துகளின் விலையை குறைத் திட வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்கிட வேண்டும். பொது சுகாதாரத்தை மேம்படுத்திட ஜிடிபியில் 5 சதவீத நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் (சிஐ டியு) சார்பில் மேற்கு கிளைத் தலைவர் விவேகானந்தன் தலைமையில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் கோபிநாத் ஆகி யோர் விளக்கி பேசினர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் இரா.லெனின் சிறப்புரையாற்றினார், கிழக்கு கிளை பொருளாளர் கோபிநாத் நன்றி கூறினார்.