விருதுநகர், ஜன.30- விருதுநகரில் கட்டி முடிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ள புதிய பேருந்து நிலையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். பைபாஸ் ரைடர் பேருந்துகள், தொலை தூரப் பேருந்துகள், தனியார் ஆம்னிப் பேருந்துகள் ஆகியவை வந்து செல்ல வேண்டும். மாவட்டத் தலை நகருக்குள் அனைத்துப் பேருந்துகளும் வருவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.முத்துவேலு, பி.நேரு, காங்கிரஸ் நகர் தலைவர் டி.ஜி.நாகேந்தி ரன், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி.பால முருகன், மக்கள் நீதி மய்யம் காளிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் லிங்க சாமி உட்படப் பலர் பங்கேற்றனர்.