districts

img

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம்

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை முன்பு சனிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேற்கு மாவட்டத் தலைவர் அ.ரெங்கசாமி தலைமை வகித்தார். சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராஜ் மோகன், நகரத் தலைவர் பக்சிராஜா வன்னியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகாசியில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.