மதுரை, நவ. 24- சுமைப்பணி தொழிலா ளர்களுக்கு தனி நலவாரி யம் அமைக்க வேண்டும். இஎஸ்ஐ , பிஎம் பிடித்தம் செய்ய வேண்டும். வீடு இல் லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். ஓய்வு அறைகள் மற்றும் மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும். டாஸ்மாக் சுமைப்பணி தொழி லாளர்களுக்கு இறக்கும் கூலி, ஏற்றும் கூலி , தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்திட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் எல்லீஸ்நகர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் எதி ரில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சுமைப்பணி தொழிலா ளர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் எஸ். சந்தியாகு தலைமை வகித்தார். சிஐ டியு புறநகர் மாவட்ட செய லாளர் அரவிந்தன் துவக்கி வைத்து பேசினார், புறநகர் மாவட்டச் செயலாளர் பொன் ராஜ், மாநகர் மாவட்டச் செய லாளர் பாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் இரா, தெய்வராஜ், மாவட் டச் செயலாளர் இரா. லெனின் ஆகியோர் ஆத ரித்துப் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் எம். பால சுப்பிரமணியம் நிறைவுரை யாற்றினர், ஆர்ப்பாட்டத் தில் 150-க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர் கள் கலந்து கொண்டனர்.