districts

img

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.8- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது போடப் பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாய சங்கம் மற்றும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் எரும பட்டியில் உள்ள இந்திய ஜனநா யக வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது கஞ்சா வைத்திருப்பதாக பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த பொய் வழக்கை உடன டியாக திரும்ப பெற வேண்டும். மேலும் கஞ்சா மற்றும் கள்ளச் சாராய விற்பனை செய்யும் கட்டப் பஞ்சாயத்து நபர்களுக்கு போலீ சார் உடந்தையாக இருக்கக்  கூடாது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எருமப்பட்டி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.  

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விவ சாயிகள் சங்கத்தலைவர் பெரு மாள், அத்துமீறி மது விற்பனை செய்வது, மது மற்றும் சமூக  விரோத செயல்களால் எருமப் பட்டி பல ஆண்டுகளாக சீரழிந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு கூடுதல் கவனம் செலுத்தி இந்திய வாலிபர் சங்கம்  மற்றும் அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு  கட்ட பேராட்டங்களை நடத்தினர்.  இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில்  ரவுடிசம் மற் றும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நபர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு காவல்துறையினர்  பொய் வழக்கு போட்டுள்ளனர்.  இந்த பொய் வழக்கை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும். பொய் வழக்குக்கு காரணமாக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என வலியுறுத்தி னார்.