திண்டுக்கல் ஜூன் 16 திருச்சியில் கஞ்சா விற்ற பாஜக கும்பலை தட்டிக் கேட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் தௌபிக் மீது அரிவாளால் வெட்டி கொடூர தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வெள்ளியன்று திண்டுக் கல்லில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி மாவட்டம் காட்டுர் அம்மாக்குளம் பகுதி வாலிபர் சங்க கிளைச்செயலாளர் தௌபீக். இவர் அப்பகுதியில் பாஜகவினர் கஞ்சா விற்ற கும்பலை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திர மடைந்த பாஜக குண்டர்கள் தௌ பீக்கை அரிவாளால் கொடூரமான தாக்கியுள்ளது. பாஜகவின் இந்த ரௌடித்தனத்தை கண்டித்து திண்டுக்கல்லில் தபால் அலுவல கம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சிலம்பர சன் தலைமை வகித்தார். மாவட் டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்ட துணைச்செயலாளர் பிரேம் குமார், ஆனந்த், சக்திவேல், மாணவர் சங்க மாவட்டச்செய லாளர் முகேஷ், உள்ளிட்ட பலர் பேசினர். பரமக்குடி பரமக்குடி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாவட்டச் செயலாளர் தட்சி ணாமூர்த்தி தலைமை வகித்தார். தாலுகா தலைவர் ரஞ்சித், செயலா ளர் முனியசாமி மற்றும் தாலுகா நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சின்னமனூர்
தேனி மாவட்டம் சின்னமனூ ரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கே.கரண்குமார் தலைமை வகித் தார். மாவட்டப் பொருளாளர் கே.ராஜா, மாவட்ட துணைச் செய லாளர் டி.நாகராஜ் ஆகியோர் பேசி னர். மாவட்டச் செயலாளர் சி. முனீஸ்வரன் நிறைவுரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.