districts

பணி நெருக்கடிகளை கைவிடுக: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.25-  வளர்ச்சித் திட்டங்களை இலக்கு சார்ந்த திட்டமாக செயல்படுத்து வதை கைவிட வேண்டும். பாரத பிரதமர் வீடுகட்டும் திட்டம் , கழிப் பறைகள் மேம்படுத்தும் திட்டம்  மற்றும் நூறு நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து தினசரி முன்னேற்ற அறிக்கை கோரி திட்டப் பணிகளை சீரழிப்பதை கைவிட வேண்டும். பாரத பிரதமர் வீடுகட்டும்  திட்டத்தில் களப்பணியாளர்களுக்கு கண்மூடித்தனமாக இலக்குகள் அளிப்பதை கைவிட வேண்டும். வளர்ச்சித் திட்டங்களை நேர்மை யான முறையில் செயல்படுத்த ஊக்கப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  சங்கத்தின் மாவட்டத்  தலைவர்  சந்திரசேகர்  தலைமை வகித்தார். கோரிக்கை யினை விளக்கி மாவட்டச் செயலாளர் அ.பாலாஜி பேசினார். ஊராக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் மகாலிங்கம். வட்டர வளர்ச்சித்துறை சங்க  நிர்வாகி ராமர் ஆகியோர் ஆதரித்துப் பேசி னார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மா. விஜய பாஸ்கர் கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் அன்பரசு நன்றி கூறினார்.