districts

img

கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 அவிநாசி,ஜன.28- அரசாணை 152, 139 ரத்து செய்யக்கோரி  கருப்பு பேட்ச் அணிந்து சிஐடியு உள்ளாட்சித்  துறை ஊழியர்கள் சங்கத்தினர் திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணி யாளர், வாகன ஓட்டுநர்கள், கொசு புழு ஒழிப்பு  உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகளை  வெளி முகமை (அவுட்சோர் சிங்) மூலம்  செய்ய வேண்டும் என்கின்ற வகையில் அர சாணை 139 மற்றும்152 உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் எதிர்கால  வாழ்வு கேள்விக்குள்ளாகும். ஆகவே அர சாணை 152, அரசாணை 139 ரத்து செய்யக் கோரி கருப்பு பேட்ச் அணிந்து சி ஐ டியு ஊரக  உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார் பில் திருமுருகன்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர்  பழனிச்சாமி, திருமுருகன்பூண்டி நகராட்சி  கிளைச் செயலாளர் லோகநாதன், திருமுரு கன்பூண்டி நகர மன்ற உறுப்பினர்கள் சுப்பிரம ணியம், தேவராஜன், பார்வதி சிவகுமார், விவ சாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெங் கடாசலம், பனியன் சங்க நிர்வாகி பாலசுப்பிர மணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.