தேனி ,ஜன.21- தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி காண்ட்ராக்ட் துப்புரவு பணியாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகையை உடனே செலுத்திட வேண் டும். மாவட்ட ஆட்சியர் உத்த ரவுப் படி தினக் கூலி ரூ.424 வழங்க வேண்டும்.10 ஆம் தேதிக்குள் மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக் கிழமை தேனி ஆட்சியர் அலு வலகத்தில் சிஐடியு உள்ளா ட்சி ஊழியர் சங்கத்தின் சார்பில் முறையீடு போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி . ஜெயன் தலைமை வகித் தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி . ஜெயபாண்டி.சிஐடியு மாவட்ட தலை வர் சி. முருகன், மாவட்ட நிர் வாகிகள் எஸ் . பொம்மை யன். ரஞ்சித் குமார், கூடலூர் நகராட்சி கிளை நிர்வாகிகள் பிரியா. பிரகாஷ். பாண்டீஸ் வரி. ஈஸ்வரி. மற்றும் சிஐடியு நிர்வாகிகள் ஏ.சி காமுதுரை, கோபால், மாணவர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் உள்ளிட்டு கூடலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.