ராஜபாளையம், பிப்.3- ராஜபாளையம் அருகே தள வாய்புரத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந் நிலையில் கடந்த புதன், வியாழன் இரு நாட்களாக நடைபெற இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது தொழிலாளர்களி டையே அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இராஜபாளையம் அருகே தள வாய்புரத்தில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்களில் காட்டன் சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். 75 சதவீத கூலி உயர்வுடன் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், 20 சத வீதம் போனஸ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 30-ம் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், விசைத் தறி உரிமையாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் இடையே முத்தரப்பு பேச்சு வார்த்தை புத னன்று விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெறுவ தாக இருந்தது. ஆனால் உரிமை யாளர் சங்கத்தினர் வராததால் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. இந்நிலையில் வியாழ னன்று ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழி லாளர் நலத்துறை அதிகாரிகள் வராததால் ரத்து செய்யப்பட்டு வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இரு நாட்களாக நடைபெற இருந்த பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டது தொழிலாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி யது. இதனால் வெள்ளிக்கிழமை யன்று முத்துச்சாமி யாபுரத்திலி ருந்து ஊர்வலமாக கிளம்பிய தொழிலாளர்கள் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் உற்பத்தியாளர்கள் சங்க அலுவல முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு ராஜ், ஏஐடி யூசி அய்யனார் ஆகியோர் தலைமை தாங்கினர். சிஐடியு கைத் தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், பரமேஸ் வரன் ,சிபிஐ கணேசமூர்த்தி உள்பட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.