districts

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நாராயணன் திருப்பதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தேனி மாவட்ட குழு சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளருமான கே.சாமுவேல்ராஜை ரயில் பயணத்தின் போது, மிரட்டிய பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் பி.மதன்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இ.தர்மர், மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், இளங்கோவன், கணேசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.