districts

img

ஒன்றிய அரசு அலட்சியம் சிபிஐ(எம்) கண்டன ஆர்ப்பாட்டம்

இடுக்கி, ஜன.24- கேரள மாநிலத்தின் மீதான ஒன்றிய அரசின் அலட்சி யத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் வலுத்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மையங்களில் ஞாயிறன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பீர்மேடு வட்டார கமிட்டி சார்பில் பள்ளிக்குந்நில் நடை பெற்ற போராட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.மணி துவக்கி வைத்தார். பகுதி செயலாளர் எஸ்.சாபு, ஆர்.தினே சன், வி.எஸ்.பிரசன்னன் ஆகியோர் பேசினர். குமுளி ஒன்றா வது மைலில் அமராவதி லோக்கல் கமிட்டி நடத்திய போராட்டத்தை டிஒய்எப்ஐ மாவட்டச் செயலாளர் ரமேஷ் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கே.எம்.சித்திக், பி.ராஜன் ஆகியோர் பேசினர். வண்டிப்பெரியாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.எல்.ஜோசப் தொடங்கி வைத்தார். எம்.கே.மோகனன், எஸ்.ராஜேந்திரன், பிரமோத் வர்க்கீஸ் ஆகியோர் பேசி னர். செங்கரயில் சிபிஐ (எம்) பீருமேடு பகுதி செயலாளர் எஸ்.சாபு துவக்கி வைத்தார். டிஒய்எப்ஐ மாவட்டத் தலைவர் எஸ்.சுதீஷ், கே.ஜே.தேவஸ்யா, சிவன்குட்டி, விஜயலட்சுமி, ஷீபா ஆகியோர் பேசினர்.