சிவகங்கை, ஜூன் 19- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றி யம் சின்னகண்ணனூர் கண்மாய்க்கான கால்வாய் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சின்னகண்ணனூர் ஊராட்சித் தலைவர் அங்குசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்தி டம் திங்களன்று மனு அளித்தனர். மனுவில், “சின்ன கண்ணனூர் கிராம கன்மாய்க்கு மிளகனுர் கண்மாயிலிருந்து உபரி நீர் வந்து கொண்டி ருக்கிறது. வரும் வழியில் திறந்த வழி ஓடையில் கொட்ட கச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் கரை அமைத்துத் தண்ணீர் வரவிடாமல் தடுத்துள்ளனர். இதை யடுத்து ஆட்சியரிடம் 2020-ஆம் ஆண்டு நவம்பர் அளித்த மனுவின் அடிப்படையில், வருவாய்த்துறையின் கல் ஊன்றியுள்ளனர். பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பு இடத்தைப் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றித் தருவதாக அளித்த உறுதிமொழி அளித்தனர். ஆனால், இதுநாள் கரை அகற்றப்படவில்லை. வருடம் தோறும் ஆடி மாதம் கிராம மக்கள் ஒன்று கூடி தண்ணீர் வரத்துக் கால்வாயைச் சுத்தம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு சுத்தம் செய்வ தற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக இரண்டு கிராம மக்களிடம் பிரச்சனை எழலாம்” எனத் தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வதாக எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.