தேனி, மே 25- வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தர வின் படி ஒருங்கிணைந்த முதுநிலை பட்டி யல் வெளியிட வேண்டும் என தேனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. இது குறித்து சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் ராமலிங்கம் ,மாவட்டச் செயலா ளர் கண்ணன் ஆகியோர் அளித்துள்ள மனு வில் தெரிவித்துள்ளதாவது: ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியல் வெளியிடுவதில் வருவாய் நிர்வாக ஆணை யரின் கடித எண் பணி 4(3), 48015ஃ2023, நாள். 26.07.2022- இன்படி திருத்தம் செய்து உத்தரவிடப்பட்டு 10 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையின்றி கிடப்பில் உள்ளது. இதனால் பதவி உயர்வு கிடைக் காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியகுளம் வட்டாட்சியர் மீதான புகா ரின் மீது உள்ளக புகார் குழுவின் முடிவு களின்படி வட்டாட்சியருக்கு களங்கம் ஏற் படுத்தப்பட வேண்டும் என்ற உள்நோக் கத்துடன் புகார் அளித்தவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேனி மாவட்ட வருவாய் அலகில் ஒவ்வொரு பணி நிலைக்கும் (அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை ) முதுநிலை நிர்ணயம் செய்து வெளியிடக் கோரி பலமுறை வலியுறுத்தப்பட்டு இது நாள்வரை வெளியிடப்படாமல் உள்ளது. இதனால் பதவி உயர்வில் பட்டியல் வெளி யிடுவதில் முரண்பாடுகள் ஏற்பட காரண மாக உள்ளது. எனவே முதுநிலை நிர்ணயம் செய்து உடன் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 15.09.2022 நாளினை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட வேண்டிய துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும். தரமற்ற கட்டிடம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலு வலகம் கடந்த ஓராண்டுக்கு மேலாக புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இப் புதிய கட்டிடத்தில் தரமற்ற வயரிங் மற்றும் கட்டிடம் உறுதியின்மை காரணமாக அடிக் கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், மின் சுவிட்ச் கணினி மற்றும் ஜெராக்ஸ் மிசின், பிரிண்டர் சப்தத்துடன் வெடித்துச் சிதறிவிடுகிறது. அலுவலகத்தில் மின் விசிறி, இணையதளம், மின்விளக்கு முடங்கியுள்ளன. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.