சின்னாளப்பட்டி, ஜன.2- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் முன்னிலைக் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குறுக்கத்தான் குளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். முன்னிலைக் கோட்டை ஊராட்சியில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குறுக்கத் தான்குளம் தண்ணீரின்றி வறண்டு இருந்தது. தற்போது பெய்த மழையால் நீர் நிரம்பி மறுகால் பாயும் அளவிற்கு வந்துள் ளது. இந்த நீராதரத்தால் முன்னிலைக் கோட்டை, பஞ்சம்பட்டி, பிள்ளையார் நத்தம் ஆகிய ஊர்களில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் குளத்தில் முட்செடிகள் அடர்ந்து காணப் படுவதால் குடிநீர் தட்டுப்பாடு வந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ரமேஷ் பாபு கூறும் போது, கடந்த 10 வருடத்துக்கு முன்பு மறு கால் பாய்ந்ததற்கு பின்னால் இப்போது தான் மறுகால் பாயத் தொடங்கி இருக்கிறது. முள்செடிகள் படர்ந்து இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் முள்செடிகளை அகற்றவில்லை என்று கூறினார்.