இன்றைய நிகழ்ச்சி
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாநகர் சார்பில் விஷவாயு தாக்கி பலியானோருக்கான நீதி கேட்டு சிறப்பு கருத்தரங்கம்: இடம் : ஐஎம்ஏ மகால், மதுரை மருத்துவக் கல்லூரி வளாகம் மதிச்சியம் / டிசம்பர 22 மாலை 5 மணி. பங்கேற்பு:மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு, மாநில பொதுச் செயலாளர் கே. சாமு வேல்ராஜ், சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, பத்திரிக்கையாளர் ஜெயராணி.
நீர்திறப்பால் குறைந்து வரும் வைகை நீர்மட்டம்
தேனி டிச.21- பருவமழை கைகொடுத்ததால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. அத னைத்தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. புதன்கிழமை காலை நிலவரப்படி குடிநீர் மற்றும் பாச னத்திற்கு 1919 கன அடி நீர் திறக்கப்படு கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 65.85 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 549 கனஅடி நீர் வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் எட்டமுடையவில்லை. தற் போது 141.70 அடியாக உள்ளது. 454 கன அடி நீர் வருகிறது. 250 கன அடி நீர் திறக் கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 80 கனஅடி நீர் வரு கிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 31 கனஅடி நீர் வரு கிறது. 27 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வ.புதுப்பட்டி அரசு மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம்
விருதுநகர், டிச.21- விருதுநகர் மாவட்டம், வத்தி ராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த னர். இது தொடர்பாக மருத்து வர் மற்றும் செவிலியரை பணி யிட மாற்றம் செய்து சிவகாசி துணை இயக்குனர் செவ்வா யன்று உத்தரவிட்டார். வத்திராயிருப்பு அருகே யுள்ள வ.புதுப்பட்டியைச் சேர்ந்த ராம்குமார் மனைவி அரங்கநாயகி(18). இவர் பிரச வத்துக்காக வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவ ருக்கு பெண் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்தது. தாய்க்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டதைத்தொடர்ந்து திரு வில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அரங்கநாயகி யின் தந்தை ஆசீர்வாதம் விருது நகர் மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று புகார் மனு அளித்திருந் தார். அதில், அரசு செவிலியர் மற்றும் மருத்துவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், துணை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முடிவில், தாய் மற்றும் குழந்தை உயிரி ழந்தது தொடர்பாக மருத்துவர் தேவிகாவை சிவகாசி தாலுகா எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், செவிலியர் உமாமகேஸ்வரி யை சாத்தூர் தாலுகா தாயில் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மாற்றம் செய்து சிவகாசி துணை இயக்கு னர் கலுசிவலிங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், துறைரீதியான விசாரணை நடைபெற்று வரு வதாகவும்,விளக்கம் அளிக்க இருவருக்கும் உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.
கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க தனிநபர்கள் முயற்சி குடியிருப்புகளை இடிப்பதை தடுத்து நிறுத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர்
நிலத்தை வகை மாற்றம் செய்து தர கோரிக்கை
மதுரை, டிச.21- மதுரை சிம்மக்கல் பகுதி யில் மாவட்ட மைய நூலகம் பின்பகுதியில் உள்ளது துவ ரைக்களம். இப்பகுதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு பாத் தியப்பட்டது என்றும் இதை சுப்பையா பிள்ளை என்ற பூசாரியும் அதற்குப்பின் முத்து இருளப்பன் என்ற பூசாரியும் பொறுப்பில் இருந்து வந்தனர். சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் மக்கள் குடியிருந்து வரு கின்றனர். 450 வீடுகளில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மின் கட்டணம், வீட்டு வரி, குழாய் வரி உள்ளிட்டவைகளை இப் பகுதி மக்கள் மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறார்கள். அதே போல் ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற முக்கிய ஆவணங்களும் இதே முக வரியில் அனைவருக்கும் உள்ளன.
தற்போது இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்வ தற்காக இங்குள்ள மக்களை வெளியேற்றி குடியிருப்பு களை இடிப்பதற்கான உத்த ரவு வந்துள்ளது என்று திடீ ரென்று கூறி கூறிவருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் நில அளவையாளர்கள் யாரும் இல்லாமல் சில வழக்கறிஞர் களுடன் காவல்துறை உத வியுடன் இடிப்பதற்காக செவ்வாயன்று வந்தனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி களிடம் கூறினர். கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், துணை மேயர் தி. நாகராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜா. நர சிம்மன், அ.கோவிந்தராஜன், டி. செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. கோபி நாத், எஸ்.வேல்தேவா ஆகி யோர் அங்கிருந்த நீதிமன்ற அமீனா மற்றும் காவல்துறை யினரிடம் விவரங்களை கேட் டறிந்தனர். பின்னர் கட்சித்தலை வர்கள் அதிகாரிகளிடம் கூறு கையில், மூன்று தலைமுறை களாக இப்பகுதியில் மக்கள் வசித்து வருகிறார்கள். திடீ ரென்று காலிசெய்ய சொன் னால் அவர்கள் எங்கு செல் வார்கள்? இது போன்ற கோவில் புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து குடி யிருக்கும் மக்களுக்கே வழங் கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. எனவே மாநகராட்சி மற் றும் மாவட்ட நிர்வாகம் கலந்து ஆலோசித்து இப் பகுதியில் மக்கள் குடியி ருப்பதற்கான வழிவகை யினை செய்து அவர்களுக்கு பட்டா மாறுதல் செய்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி னர்.