districts

மதுரை முக்கிய செய்திகள்

ஆடம்பர கார்களில் கஞ்சா கடத்திய வியாபாரி கைது 

மதுரை, மார்ச் 14-  மதுரை மாநகர் அய்யர்பங்களா ஜி. ஆர். நகர் மூன்றா வது தெருவில் வசிப்பவர் பரமேஸ்வரன். இவரது மனைவி  விஜயலட்சுமி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். மதுரை கடச்சனேந்தல் பகுதியில் காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் கஞ்சா கடத்திய பரமேஸ்வரனை  கைது செய்தனர்.  அவரி டம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து தொடர்ச்சியாக கஞ்சாவை கடத்தி வந்து மதுரை, தேனி,  திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் கஞ்சாவை விற்பனை செய்வது தெரியவந்தது இதனையடுத்து பரமேஸ்வரனிடம் இருந்து 5  கார்  கள், 4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான ரொக்கப்பணம் 73 கிராம் தங்க நகைகள், 14 செல்போன்கள், லேப்டாப்,  2 மோடம், கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.   இதுகுறித்து திருப்பாலை காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்து பரமேஸ்வரனை கைது செய்தனர். இவருக்கு உதவிய மனைவி விஜயலட்சுமி மீது வழக்குபதிவு செய்து  அவரையும் தேடி வருகின்றனர். 

விளம்பரம் மூலம் ஏமாற்றிய  நிதி நிறுவனத்தின் மீது பணமோசடி  புகார்

மதுரை, மார்ச் 14-  மதுரை மாநகர் பசுமலை பகுதியில் ஜேஆர்ஜே மார்க்  கெட்டிங் தங்கம், வெள்ளி விற்பனை என்ற நிறுவனத்தில் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு பவுன் தங்கக்  காசு வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி சுவரொட்டிகள் மூல மாகவும், செய்தி்த்தாள்களிலும் விளம்பரம் செய்தனர். இதனை நம்பி மதுரை மாநகரின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்  தில் முப்பதாயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரைக்கும் முதலீடு செய்தனர். முதலீடு செலுத்தியவர்களுக்கு இரண்டு ,மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக மாதம் தோறும் லாப பணம்  7500 ரூபாய் வழங்கினர். மூன்று மாதங்களுக்கு பின்னர்  லாப பணம் வராத நிலையில் முதலீடு செய்த பொது மக்கள் நிறுவனத்தின் தலைவரான ஜெயராஜ் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது உங்களுடைய பணம் விரைவில் வரும் என கூறினார். இதையடுத்தும் சில  மாதங்கள் ஆகியும் பணம் வராத நிலையில் அலுவல கத்திற்கு சென்று பார்த்தபோது ஜெயராஜ் இல்லை. வேலை ஆட்களிடம் விசாரித்தபோது  சில நாட்களில் பணம் வரும் என கூறினர்.  ஆனாலும் பல மாதங்கள் ஆகியும் லாப பணம் வர வில்லை. டெபாசிட் தொகையை திரும்பித் தருமாறு மக்கள் கேட்டுள்ளனர். ஆனால் நீங்கள் தான் பணம் திரும்  பத்தர வேண்டும் எனக் கூறி டெபாசிட் செய்த நபர்களின் வீடுகளுக்கு நிறுவனத்தினர் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் மனம் நொந்து போன முதலீட்டாளர்கள்  செவ்வாயன்று  மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பீகார்  தொழிலாளர்கள் குறித்து  போலி வீடியோ: பாஜக பிரமுகருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

மதுரை, மார். 14-  பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படு வது போல் வீடியோ வெளியிட்ட பாரதிய ஜனதா கட்சியின்  பிரமுகருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது.  போலி வீடியோ வெளியிட்டதாக குற்றம்சாட்டப் பட்டுள்ள தில்லியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு நீதிபதி  இளந்திரையன் முன்பாக செவ்வா யன்று விசாரணைக்கு வந்தது .அப்போது அரசு தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர்,  மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இது போன்ற  வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார் .இதனால் தமி ழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு  பதற்றமான சூழல் நிலவியது .எனவே இவர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் ஆகையால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, இது போன்று வீடியோக்  கள் பதிவு செய்வதை பார்க்கும்போது ,  தமிழகத்தில் பிற  மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்  உள்ளது போல் வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால்  தமிழகத்தில் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படு வது போன்ற பதற்றமான சூழலும் நிலவியது என கருத்த  தெரிவித்த  நீதிபதி, மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தார்.  இந்த மனு குறித்து காவல்துறை தரப்பில் பதில ளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

கம்பம் அருகே ரூ 10 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல்  மின்னல் வேகத்தில் மடக்கி பிடித்த காவல்துறையினர்

தேனி, மார்ச் 14- கம்பம் -ராயப்பன்பட்டி அருகே தோட்டத்திற்கு வந்த  கோழிப்பண்ணை தொழிலதிபரை ரூ. 10 கோடி கேட்டு கடத்திய நபர்களை காவல்துறையினர் மின்னல் வேகத்  தில் செயல்பட்டு தொழிலதிபரை மீட்டனர்.  ராயப்பன்பட்டி ஜெனீஸ் கோழி பண்ணை உரிமை யாளர் பவுல் மகன் அதிசயம்(68).இவர்  ஆனைமலை யன்பட்டியில், உள்ள  திராட்சை தோட்டத்தில் செவ்வாய்க்  கிழமை காலை நடைபயிற்சி மேற்கொள்ள  சென்றார்.  பின்னர் இரு சக்கர வாகனத்தில்  வீட்டிற்கு  வந்தார். அப்போது காரில் வந்த இருவர் அதிசயத்திடம் பேசி உள்ளனர். சிறிது நேரத்தில். அவரது  கை, கால்களை பிடித்து காரில்  தூக்கிப் போட்டு. வேகமாக சென்றனர். இதனை தோட்டத் தொழிலாளி  பாலமுருகன் என்பவர் பார்த்து, கடத்தப்பட்ட காரை மறிக்க முயன்றார். அவரை மோதுவது போல் வந்த கார் அதிவேகத்தில் சென்றது. இதுகுறித்து உடனடியாக. ராயப்பன்பட்டி காவல் நிலை யத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.   இதனிடையே  தேனி மாவட்டம் முழுவதும் காவல் துறையினருக்கு எச்சரிக்கை  செய்யப்பட்டது.  சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவை வைத்து, சந்தேகப்பட்ட கார்  களின் நம்பர் சோதனை செய்ததில், ஆண்டிபட்டி பகுதியில் டவேரா கார் ஒன்று வேகமாக  சென்றது.ஆண்டிபட்டியில்  இருந்து, சென்ற காரை நோக்கி, ஆண்டிபட்டி காவல் சார்பு  ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா தலைமையில், போலீசார்  பின்தொடர்ந்து விரட்டினர். கார் நிற்காமல் சென்றது. வடுகபட்டி கல்குவாரி பிரிவில் பின் தொடர்ந்த போது  தொழிலதிபர் அதிசயத்தை காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றனர். காயத்துடன் அதிசயம் மீட்கப்பட்டு, தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். கடத்தப்படட 2 மணிநேரத்தில் காவல்துறையினர் மீட்டனர். இது தொடர்பாக மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த தர்மராஜ் மகன் பிரபு (31),திருமுருகன் மகன்  அஜித் (26)முருகேசன் மகன் கௌசித்(22) ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் இதில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகிறார்கள் .

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

விருதுநகர், மார்ச் 14- விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த் யோகராஜ்  மனைவி தமிழ்செல்வி(26). இவர் தனது குழந்தைகளு டன் நகராட்சி பூங்காவிற்கு சென்று விட்டு திரும்பி யுள்ளார். அப்போது, வீட்டிற்குள் பீரோவில் வைக்கப்பட்டி ருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் பணம் ரூ.22ஆயி ரம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து தமிழ்செல்வி, கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவ செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

சாத்தூர், மார்ச் 14- விருதுநகர் மாவட்டம், சாத்தூர், மன்னார் கோட்டை  சாலையைச் சேர்ந்தவர் பத்மினி(36). இவர் தனது வீட்டின்  அருகே துணிகளை காயப் போட்டுக் கொண்டிருந்தாராம். அபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர், பத்மினி கழுத்தில் கிடந்த மூன்றரை பவுண் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடி விட்டாராம். எனவே, பத்மினி கொடுத்த புகாரின் பேரில், அம்மா பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

கம்பத்தில் போலி கேரள முத்திரைத்தாள்களுடன்   2 பேர் கைது - இயந்திரம் பறிமுதல்

தேனி, மார்ச் 14- கம்பத்தில் போலி முத்தரைத் தாள்களுடன் கேரள வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர் அச்சடிக்க பயன்படுத்திய இயந்தரம் மற்றும் முத்திரை  தாள் அடிக்க பயன்படுத்தும் வெள்ளை தாள்களை  கைப்பற்றினர் . கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கள்ள  நோட்டு மற்றும் போலியான முத்தி ரைத்தாள் அடித்து கடத்தப்படுவதாக கம்பம்  வடக்கு ஆய்வாளர்  சரவணனுக்கு தகவல்  கிடைத்துள்ளது. அதன் பேரில் போலீசார்  கம்பமெட்டுச் சாலையில் உள்ள 18 ஆம்  கால்வாய் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது அவ்வழியாக வந்த ஜீப்பை  நிறுத்தி போலீசார்  சோதனை மேற்கொண்ட னர்.அப்போது ஜீப்பில் இருந்த நபர்கள் தான்  பத்திர எழுத்தர் என கூறி ரூ.5 ஆயிரம் மதிப்  புள்ள 4 முத்திரை தாள்களை காண்பித்  துள்ளனர்.  அப்போது அந்த முத்திரைத்தாள் போலி யானது என போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து முத்திரை தாள்களை பறி முதல் செய்த போலீசார் அவர்களிடம்  விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மொண்டி எருமை பகுதியைச் சேர்ந்த முகமது சியாது (41) பத்திர எழுத்தர், சிரட்ட வேலில் பகுதியைச் சேர்ந்த பிபின்  தோமஸ்(36) என்பதும் கம்பத்தில் ஓடைக் கரை தெருவில் கோபிகிருஷ்ணன் என்பவ ரது வீட்டில் வாடகை எடுத்து தங்கி வந்த தாகவும், அங்கு முத்திரைத்தாள்கள் அச்ச டித்ததாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த வீட்டில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 போலியான முத்திரைத்தாள்கள்,100 ரூபாய் மதிப்புள்ள 3 முத்திரைத்தாள்கள்,500 ரூபாய் நோட்டு  பின்புறம் அச்சடிக்கப்பட்ட  பேப்பர், அச்ச டிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ,அச்ச டிப்பதற்கு வைக்கபட்டிருந்த 538 வெள்ளை பேப்பர்களை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது சியாது, பிபின் தோமஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.மேலும்  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் மற்றும் அச்சிடும் இயந்திரம் ஆகியவற்றை பறி முதல் செய்தனர்.