தூத்துக்குடி, நவ.15 தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலை க்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். தூத்துக்குடி நகர தந்தை என அழைக் கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 153-வது பிறந்த நாள் விழா செவ்வாயன்று (நவ.15) கொண்டாடப்படு கிறது. இதனை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பி னர் எம்.சி.சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.