வேடசந்தூர், ஜூலை 27- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதி யில் அதிகளவு நூற்பாலைகள் செயல் பட்டு வருகிறது.இங்கு வடமாநிலத்தில் உள்ள அப்பாவி தொழிலாளர்கள் அங் குள்ள புரோக்கர் மூலம் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு தமிழக புரோக்கரர் களால் ஒரு தொழிலாளர்களுக்கு குறிப் பிட்ட தொகை கமிஷன் பெற்றுக் கொண்டு தனியார் நூற்பாலையில் பணி யில் சேர்த்து விடப்படுகிறார்கள். தனியார் நூற்பாலையில் சிறை போல விடுதி வசதி இருக்கும். தேவை யில்லாமல் வெளியே வரமுடியாது. மேலும் 8 மணி நேரம் பணி என்ப தனை 16 மணி நேரம் வரை வடமாநில தொழிலாளர்களிடம் பணியாற்ற வற்புறுத்தப்படுகிறது. கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரீத்தா முணக்கூர்(வயது17), போர்காராணி ஜெயா(வயது16) உள் ளிட்டோர் வடமாநிலத்தில் இருந்து ஒரு புரோக்கர் மூலம் அழைத்து வரப் பட்டு வேடசந்தூரில் சேணன்கோட்டை அருகே விடுதியில் தங்க வைத்து தனி யார் நூற்ட்பாலையில் பணியாற்றி வந்த னர்.
இந்நிலையில் நூற்பாலையில் பணியாற்ற பிடிக்காததால் தங்களை சொந்த ஊருக்கு செல்கிறோம் என்று புரோக்கர் பாபுசாண்டாவிடம் கூறியுள்ளனர். அதற்கு புரோக்கர் மறுத்து ஓடிசா வில் இருந்து அழைத்து வந்த செலவு தொகையை கொடுங்கள் என்று கூறி யுள்ளார். அதற்கு இளம்பெண்கள் மறுத் ததால் செல்போன்கள் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு 2 இளம்பெண்களையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு சென் றுள்ளார். சக தொழிலாளர்களின் உதவி யோடு விடுதியில் இருந்து தப்பி 2 பெண் களும் வேடசந்தூர் காவல் நிலையத் தில் தஞ்சமடைந்தனர். போலீசார் புரோக்கரை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு இளம்பெண் களை அவரிகளிடம் சொந்த ஊரான ஒடிசா மாநிலத்திற்கு ஒருவரின் துணை யோடு அனுப்பிவைத்தனர். ஆனால் இவ்வளவிற்கும் காரண மான புரோக்கர் மீது எந்தவித நட வடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வேடசந்தூர் பகுதியில் தனியார் நூற்பாலை விடுதிகளில் பெண் தொழி லாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வா கம் ஆய்வு செய்து வடமாநில தொழி லாளர்கள் அடிமைபோல நடத்தப்படு வதை கண்டுபிடித்து கடுமையான நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.