மதுரை, ஏப். 27- மதுரை மாநகராட்சி சட்டபிரிவில் பணி புரியும் பிரவீன் குமார் என்ற இளநிலை உதவியாளரை புதனன்று சிவ பாக்கியம் என்ற சட்ட அலுவலர் சட்ட பிரிவிற்கு வெளியே சுமார் 2 மணி நேரம் நிற்க வைத்து தண்டனை வழங்கியுள்ளார். இதனால் பணியாளர் மயக்கமுற்று. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் இந்த ஊழியர் விரோத போக்கில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சி சட்ட அலுவலர் மீது மாநகராட்சி ஆணை யாளர, மேயர் ஆகியோர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாநகராட்சி எழுத்தர் சங்கம், மாநக ராட்சி பொறியாளர் பிரிவு பணியாளர் சங் கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வியாழனன்று மாநகராட்சி அண்ணா மாளி கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி எழுத்தர் சங்க தலைவர் வி. செந்தில் குமார் தலைமை வகித்தார். செய லாளர் குரு. பார்த்தசாரதி, பொருளாளர் சின்னச்சாமி, இணைச் செயலாளர் முரு கேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்த னர். பொறியியல் பிரிவு பணியாளர் சங்க தலைவர் சி. எம். மகுடீஸ்வரன், செயலாளர் கே. கண்ணன், பொருளாளர் கே. டி. துரைக் கண்ணன், துணைத் தலைவர் துரைராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க. நீதி ராஜா, மாநில செயற் குழு உறுப்பினர் இரா. தமிழ் மாவட்டத் துணைத் தலைவர் பரமசிவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.