districts

img

மானாமதுரையில் பயிர் ரகங்கள் அறிமுக கண்காட்சி

சிவகங்கை, மார்ச் 25- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உயர்தர உள்ளூர் பயிர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை  மாவட்ட ஆட்சித்தலை வர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார்.பின்னர் 48 விவ சாயிகளுக்கு மொத்தம் ரூ.1.23 லட்சம் மதிப்பீட்டிலான மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருட்களை வழங்கினார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில், மானாமதுரை ஊராட்சி ஒன்றி யக்குழுத் பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, வேளா ண்மை இணை இயக்குநர் .இரா.தனபாலன், திருப்பு வனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், உட்பட துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், உதவிப் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் விவ சாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.