districts

திரைப்பட இயக்குநர் மனோபாலாவின் உடல் தகனம்

சென்னை, மே 4- தமிழ் திரையுலகில் பிரபல நகைச் சுவை நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. பல படங்களை இயக்கி  யுள்ளதோடு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து  வந்த மனோபாலாவுக்கு சில நாட்க ளுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கல்லீரல் மற்றும் இருதய  பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை ஆயிரம்  விளக்கு பகுதியிலுள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு  பின் உடல்நலம் தேறி வீட்டில் ஓய்வு  எடுத்து வந்தார். இந்த நிலையில் மனோ பாலா மே 3 அன்று மரணமடைந்தார். இவரது சொந்த ஊர் நாகர்கோ வில் அருகே உள்ள மரும்பூர். மனோ பாலாவுக்கு உஷா என்ற மனைவியும்,  ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். மறைந்த மனோபாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வதற்காக சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. திரையுல கினர், ரசிகர்கள், பொதுமக்கள் என  பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி னர். அதனைத் தொடர்ந்து, வியாழக் கிழமை (மே 4) அன்று மனோபாலா வின் உடல் வளசரவாக்கம் மயானத் திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டது. அங்குள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.