தூத்துக்குடி, டிச.4 தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குடிநீர், சாலை, வடி கால், போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்ப டைப் பிரச்சனைகளை தீர்க்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் 150 கி.மீ., நடைபயணத்தை சனிக்கிழமை தொடங்கியது. மாவட்டத்தில் கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம் ஆகிய இடங்களிலிருந்து தொ டங்கிய 150 கி.மீ., நடைபயணம் தூத்துக்குடியில் ஞாயிறன்று அண்ணா நகர் பகுதியில் உள்ள பொதுக்கூட்ட மேடையில் நிறை வடைந்தது. தூத்துக்குடி மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.சீனிவாசன் தலைமையிலான நடைபய ணத்தை ஞாயிறன்று ஒட்டப்பிடா ரம் பஜாரில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது துவக்கி வைத்து பேசினார். கோவில்பட்டியில் துவங்கி ஒட்டப் பிடாரம் வழியாக வந்த நடைபயண குழுவிற்கு ஓட்டப்பிடாரம், முப்பிலி வெட்டி, மேலமடம், புதியம்புத்தூர் ஆகிய பகுதியில் ஒன்றிய செயலா ளர் த.சண்முகராஜ் தலைமையில், நகர செயலாளர் தட்சணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெருமாள், கலைச்செல்வி, ராஜகனி, கிளைச் செயலாளர்கள் சுப்பிரமனியன், மாடசாமி, சுந்தரி, தீனாகுமாரி, பிச்சையா உள்ளிட் டோர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அர்ச்சுணன் தலைமையிலான திருச்செந்தூர் நடைபய ணக்குழுவிற்கு ஆத்தூர், முக்கானி, பழையகாயல், புல்வா வெளி, முள்ளக்காடு, முத்தையா புரம் தோப்பு, லெவிஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி புறநகர் செயலாளர் பா.ராஜா, புறநகர்குழு உறுப்பினர் முனியசாமி, டேனியல்ராஜ், சுப் பையா, சரஸ்வதி, மாநகர்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், காஸ்ட்ரோ, கிளை செயலாளர் கள் பன்னீர் செல்வம், மகாராஜன், மாரியப்பன், காசி ராஜன், கார்த்திக் முத்து, வீரப்பெருமாள், சமுத்திர பாண்டி உள்ளிட்டோர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 43 வது வார்டில் சிபிஎம் கவுன்சிலர் முத்துமாரி தலைமையில் வரவேற் பளிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் திருவைகுண்டத்தில் இருந்து தொடங்கிய நடப்பயண குழு விற்கு சாயர்புரம், தங்கம்மாள் புரம், புதுக்கோட்டை, சோரிஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சங்கரன், ஒன்றிய குழு உறுப்பினர் ரவி தாகூர், திருவைகுண்டம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிரேசி பாலம்மாள், நிர்வாகிகள் சுயம்புதாஸ், பொன்ராஜ், ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.