districts

img

மனைப்பட்டா ,உதவித்தொகை வழங்கிடுக: தேனி வட்டாட்சியரகத்தில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

தேனி ,செப்.28- வீட்டுமனைப் பட்டா ,தகுதி யுள்ள நபர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் செப்டம் பர் 28 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தேனி தாலுகாவுக்கு உட்பட்ட தப்புக்குண்டு , முத்துத்தேவன்பட்டி ,ரயில்வே புறம்போக்கு பகுதிகளில் மனு செய்த அனைவருக்கும்   வீட்டுமனை, வீட்டுமனை பட்டா  வழங்க வேண்டும் .மனு அளித்த தகுதியான நபர்களுக்கு முதியோர், விதவை உதவித்தொகை வழங்க வேண்டும் .மக்கள் கொடுத்து வரும்  மனுக்கள் மீது  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  தேனி வட்டாட்சியர் அலுவலகத் தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு  மாவட்டக்குழு உறுப்பினர் டி நாகராஜ் தலைமை வகித்தார் .கிளைச் செயலாளர்கள்  நாகேந்திரன் ,அப்பாஸ் மந்திரி, கபார்கான், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .போராட் டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், தாலுகா செயலாளர் இ.தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர் டி ஜெய பாண்டி, தாலுகாக்குழு உறுப்பினர் கள் பொன்னுதுரை, மாதா,ம.காமத் துரை ,சரஸ்வதி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர்  போராட்டத்தில் ஈடு பட்ட தலைவர்களுடன்  தேனி வட் டாட்சியர் சரவண பாபு பேச்சு வார்த்தை நடத்தினார் .அப்போது  விரைவில் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார் .அதனைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர்.