districts

img

நடிகர் வடிவேலு தாயார் காலமானார்: சிபிஎம் அஞ்சலி

மதுரை, ஜன.19-  திரைப்பட நகைச்சுவை நடி கர் வடிவேலுவின் தாயார்  வைத்  தீஸ்வரி (எ) சரோஜினி அம்மாள்  (வயது 83) மதுரை ஐராவதநல்லூ ரில் புதனன்று  நள்ளிரவில் கால மானார்.  அவரது மறைவுச் செய்தி யறிந்து  பத்திரப்பதிவுத்துறை அமைச்  சர் பி.மூர்த்தி, முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் அமைச்சர்  செல்லூர் கே.ராஜூ உள்பட பலர் சரோஜினி  அம்மாள் உடலுக்கு மாலையணி வித்து அஞ்சலி செலுத்தினர்.  இறுதி நிகழ்ச்சி கீரைத் துறை மின்மயானத்தில் வியாழ னன்று நடைபெற்றது. இங்கு வைக்  கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாநிலக்  குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாநகர துணை மேயர் டி. நாகராஜன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் வடிவேலுவிற்கு ஆறுதல் கூறினர். சரோஜினி அம்மாள் மறை வுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துள்ளார்.