அருப்புக்கோட்டை, டிச.22- அருப்புக்கோட்டை அருகே 100 நாள் வேலை வழங்காததைக் கண்டித்து ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது செம்பட்டி ஊராட்சி. இங்கு அம் பேத்கர் காலனியில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரி வித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால், வெகுண்டெழுந்த விவசா யத் தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பஞ்சவர்ணம் தலை மையேற்றார். சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் எம்.கணேசன் உரையாற்றினார். இதில், உதயசூரியன், மனோகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்பு, நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஒருவாரத்திற் குள் வேலை வழங்குவதாக அரசு அதிகாரி கள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.