districts

img

சிபிஎம் மூத்த தலைவர் - மேடைக் கலைவாணர் தோழர் என்.நன்மாறன் முதலாமாண்டு நினைவஞ்சலி

மதுரை, அக்.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலைவரும் மேடைக் கலைவாணர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் என். நன்மாறன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி அக்டோபர் 28 வெள்ளியன்று பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நினைவஞ்சலியில் அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணண், என்.அமிர்தம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.பாலா, துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வசந்தன், ஜா.நரசிம்மன், இரா.லெனின், எம்.பாலசுப்பிரமணியம், டி.செல்வராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் , தோழர் நன்மாறன் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.