districts

img

திரிபுராவில் பாஜகவின் வெறியாட்டத்தை கண்டித்து தேனியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச் 15- திரிபுரா மாநிலத்தில் தேர்தலுக்கு பின் நடத்திய பாஜகவினரின் வன்முறை  வெறியாட்டத்தை கண்டித்தும், வன்முறை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிடச் சென்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவைத் தலைவர் எளமரம் கரீம் தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது பாஜகவினர் கொலை வெறித்  தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்  தும் தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் தேனி தாலுகா செயலா ளர் இ.தர்மர் தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் ஏ.வி.அண்ணாமலை கண்டன  உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், டி.கண்  ணன், முனீஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பி னர் பி.ஜெயராஜ், விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எல்.ஆர்.சங்கர சுப்பு  ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை நிறைவு செய்து பேசினார். மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி. வெங்கடேசன், சு.வெண்மணி, இடைக் கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு முழக்கமிட்ட னர்.