தேனி, மே 4- பெரியகுளத்திலிருந்து தாமரைகுளம் வழியாக நகர் பேருந்தை ,நீதிமன்றம் உத்தர விட்டும் இயக்காத பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கழகத்தை கண்டித்தும் தென்கரை பேரூராட்சி பகுதியில் வரும் கழிவு நீர் தாமரைக்குளம் நீர்வரத்து வாய்க்காலில் கலப்பதை தடுத்து, மாற்று வழியினை உருவாக்கிட கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாம ரைக்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு கிளைச் செய லாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். தர்ணாவில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராமச்சந்திரன், எஸ். வெண் மணி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ் . ராமச்சந்திரன், தாலுகா செயலாளர் எம்.வி . முருகன், தாலுகாக் குழு உறுப்பினர் ஆர்.கே.ராமர், ஏ.மன்னர் மன்னன், காங்கிரஸ் கட்சி வார்டு உறுப்பினர் பாலையா, கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.