திருவில்லிபுத்தூர், மே 5- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் ஒன்றியம் அத்திகுளம், தெய்வேந்திரி, வேப்பங்குளம் கிராமங்களில் வசித்து வரக்கூடிய 50க்கும் மேற்பட்ட தலித் மற்றும் தலித் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். தனிநபர் மற்றும் வழக்கினை காரணம் காட்டி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்தும் வரும் காலங்களில் தலித் மற்றும் அருந்ததிய மக்கள் பயமின்றி வாழ்வதற்கு ஏற்பாடு செய்திட வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செய லாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். அத்திகுளம், வேப்பங்குளம் பகுதி மக்கள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கே அர்ஜுனன். மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை, நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் சந்தனம், வேல்சாமி ஆகியோர் பேசினர்.