இராஜபாளையம்,ஜூன் 23- இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் செட்டி யார்பட்டியில் இருந்து புத்தூர் செல்லும் கொண்ட னேரி கண்மாய் சாலையில் தார்சாலையைக் காட்டிலும் இருபுறங்களிலும் போடப் பட்டுள்ள நடைமேடை ஒரு அடி உயரமாக உள்ளது. இந்த நடைமேடை அமைக் கப்பட்ட சில மாதங்களி லேயே குழந்தை உட்பட பத்துக்கு மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகியுள்ளன. இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதி காரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நடைமேடையின் உயரத்தை குறைத்து சாலையை சீர மைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் 22 வியாழக் கிழமையன்று புனல்வேலி மெயின்ரோட்டில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள் துரைச்சாமி, ராமகுரு, சின்ன முத்து, மலைக்கனி ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் குருசாமி துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், மாதர் சங்க மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுத்தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு முன்ன தாக கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ராமர் தலைமையில் புனல்வேலி, மீனாட்சிபுரம் ,புத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் மறியலுக்கு மக்களை அழைக்கும் முகமாக மெகா போன் மூலம் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மறியலை சீர்குலைக்கும் விதமாக தளவாய்புரம் காவல்துறையினர் , கட்சி யினர் பிரச்சாரம் சென்ற கிரா மங்களுக்கு சென்று ,மறிய லில் கலந்து கொண்டால் 15 நாட்கள் சிறையில் வைப் போம் என்று மிரட்டியுள்ள னர்.