இராமநாதபுரம்,ஜூன் 11- இராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை இயங்கி வந்த நகரப் பேருந்துகளை குறைக்காமல் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கூடு தலாக இயக்க வேண்டும் பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி தினந்தோறும் வழங்க வேண்டும் சின்ன பாலம் தோப்புக்காடு பிரான்சிஸ் நகர் பகுதிகளில் சேதம் அடைந் துள்ள சாலையை சரி செய்ய வேண்டும் அக்காள் மடம் பகுதிக்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக பாம்பன் பேருந்து நிறுத்தத்தில் கிளைச் செயலா ளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.காசி நாததுரை , மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே கருணாகரன் தாலுகா செயலாளர் ஜி.சிவா, மாவட்டக்குழு உறுப்பினர் ஜஸ்டின் மற்றும் பாக்கியம் ஆகியோர் பேசினர்.