districts

img

விவசாயம்,நூறுநாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டில் விவசாயம்,நூறுநாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதைக் கண்டித்தும். இளைஞர்களுக்கான வேலை குறித்து அறிவிக்காததை  கண்டித்தும் இராமேஸ்வரம் தாலுகா பாம்னில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாம்பன் கிளைச் செயலாளர் ஜி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்  வி.காசிநாத துரை, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஆரோக்கிய நிர்மலா, இ.ஜஸ்டின், தாலுகாச் செயலாளர் ஜி.சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.ருணாகரன் ஆகியோர் பேசினர்.