districts

img

பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி சிறையில் அடைப்பு

தேனி, நவ.22- கடுமையாக தாக்கப் பட்டு பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்ட சம்ப வத்தில் பெரியகுளம் வட கரை காவல்துறையினரின் அராஜக போக்கை கண்  டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பெரிய குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 17.11.22 தேதி பெரியகுளம் பேருந்து நிலை யத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளி, போக்குவரத்து தொழிலாளி இடையே ஏற் பட்ட தகராறில் கரும்பு வெட்  டும் தொழிலாளி ஜெயராஜ் என்பவரை பல பேர்கள் தாக்கி  படுகாயமடைந்தார். உடனி ருந்த முதியவர் பெரியசாமி யையும் கடுமையாக தாக்கி ரத்தக் காயம் ஏற்பட்டு மருத்  துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரிய குளம் வடகரை காவல்துறை யினர் தாக்குதலுக்கு ஆளான  ஜெயராஜ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.ஜெயராஜ் மீது தாக்கிய வர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்து வரு கிறார்கள். காவல்துறையின் நேர் மையற்ற செயல், அராஜக போக்கை கண்டித்து காவல் நிலையம் எதிரே கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் எம்.வி.  முருகன் தலைமை வகித் தார். கட்சியின் மாவட்ட செயற்  குழு உறுப்பினர் எம் .இராமச்சந்திரன் பேசினார் .மாவட்டக்குழு உறுப்பினர் பி.பிரேம்குமார், தாலுகா நிர்வாகிகள் எஸ் .செளந்தர பாண்டி, எஸ்.கணேசன், ஆர்.கே.ராமர், ஏ.மன்னர் மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.