சிவகங்கை, டிச.13- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி யில் 100 சதவீத வரி உயர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேவ கோட்டை நகராட்சி அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி கடைகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை 18 சதவீத கந்து வட்டியை ரத்து செய்யக் கோரியும், நகராட்சியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். லஞ்ச ஊழலுக்கு இடம் கொடுக்காமல் முடிவு கட்டி நகராட்சி நிர்வாகமே மின்மயானத்தை போர்க் கால அடிப்படையில் இயங்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினர்.